என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தனியார் மயம்"
- தூய்மைப் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியாா் மயமாக்கப்பட்டு ஒப்பந்ததாரா் மூலம் நடைபெற்று வருகிறது.
- அவிநாசி வட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
அவிநாசி:
அவிநாசி வட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். தூய்மைப் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியாா் மயமாக்கப்பட்டு ஒப்பந்ததாரா் மூலம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருமுருகன்பூண்டி நகராட்சி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக., உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த 18 நகா்மன்ற உறுப்பினா்கள் நகராட்சி ஆணையா் பி. ஆண்டவனிடன் கோரிக்கை மனு அளித்தனா்.
அதில், கூறியிருப்பதாவது:- 5 மாதங்களுக்கு முன்பு தனியாா் மயமாக்கப்பட்ட தூய்மைப் பணியால், நகராட்சி முழுவதும் பொது சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், சாக்கடை கால்வாய் தூய்மை செய்யப்படாமல் புழு மற்றும் கொசு உற்பத்தியாகி சுகாதார கேடு ஏற்பட்டு நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
தனியாா் மயமாக்கப்பட்ட தூய்மைப் பணியால் செலவு தொகையும் பல மடங்கு உயா்ந்துள்ளது. மக்களின் வரிப்பணம் பெருமளவு தூய்மைப் பணிக்கு செலவாகிறது. பொது நிதியிலிருந்து புதிதாக தெரு விளக்குகூட அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.ஆகவே தனியாா் மயமாக்கப்பட்ட தூய்மைப் பணி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனு அளிப்பின்போது, நகா்மன்றத் துணைத் தலைவா் ராஜேஸ்வரி, முன்னாள் பேரூராட்சித் தலைவா் லதா சேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
- தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 35 லட்சம் மதிப்பில் நேற்று பூமி பூஜை நடைபெற்றது.
- இதுவரை புதுச்சேரி அரசு முறையான விளக்கம் அளிக்கவில்லை.
புதுச்சேரி:
புதுச்சேரி மதுபான தொழிற்சாலை மீதான குற்றச்சாட்டை மறைக்கவே மின்துறை தனியார் மயம் என்ற அறிவிப்பை கொள்கை முடிவாக அரசு அறிவித்துள்ளது என புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். காரைக்காலை அடுத்த காரைக்கால் மேடு மற்றும் கிளிஞ்சல் மேடு பகுதிகளில் சுடுகாட்டிற்கு செல்லும் சாலை அமைப்பதற்காக, மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 35 லட்சம் மதிப்பில் நேற்று பூமி பூஜை நடைபெற்றது.இதில் பங்கறே்ற வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது- புதுச்சேரி மாநிலத்தில் மின் துறை லாப நோக்கில் இயங்கி வருகிறது. அதனை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டிய அவசியம் இப்போது என்ன அவசரம்?. மின்துறை சொத்துக்களை விற்பது வேறு, ஆனால் அதன் ஊழியர்களை விற்பது எந்த வகையில் நியாயம்?. மின்துறையை தனியார் மயமாக்குவதால் பொதுமக்களுக்கு என்ன லாபம்? என்பது குறித்து அரசு இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.
அதே போல் தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில், ஈடுபட்டு வரும் ஊழியர்களை கவர்னரோ, முதல மைச்சரோ, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரோ இதுவரை அழைத்துப் பேசாமல் மௌனம் காப்பது ஏன்?. மின் துறையை தனியார் மாயமாக்கினால் அதன் ஊழியர்களின் எதிர்காலம் என்ன என்பதுதான் கேள்வி. அதற்கு இதுவரை புதுச்சேரி அரசு முறையான விளக்கம் அளிக்கவில்லை. புதுச்சேரி மின்துறையை தனியாரிடம் கொடுத்து விட்டு அதன் மூலம் லாபம் சம்பாதிப்பது தான் அரசின் நோக்கம். இன்னும் சொல்லப்போனால், புதுச்சேரியில் செய ல்படக்கூடிய மதுபான தொழிற்சாலைகளை மீது ஏற்பட்ட குற்றச்சாட்டை மறைப்பதற்காகவே பாஜக - என்.ஆர் காங்கிரஸ் அரசு மின்சாரத்துறை தனியார் மயம் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். இதனை பொது மக்களும், அரசியல் கட்சிகளும் எதிர்த்து வருகின்றனர். ஆனால் கவர்னரும், முதல மைச்சரும் மின்துறை தனியார்மயம் ஆக்கினால் ஊழியர்களும், பொதுமக்களும் பாதிக்க பாதிக்கப்பட மாட்டார்கள் எனவும், இது அரசின் கொள்கை முடிவு என அறிவித்திருக்கிறார்கள். அப்படி என்ன ஒரு கொள்கை முடிவு என்பதை இருவரும் விளக்க வேண்டும். என்றார்.
- காரைக்காலில் மின்துறை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- புதுச்சேரி அரசு இந்த தனியார் மய கொள்கையை எதிர்க்காமல், மின்துறையை தனியார் மையமாக்குவதற்கு அரசு டெண்டர் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி:
காரைக்காலில் நேற்று இரண்டாம் நாளாக மின்துறை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தப்போராட்டத்தில் ஈடுபட்டதால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். யூனியன் பிரதேசங்களில் மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, புதுச்சேரியில் மின் துறை ஊழியர்கள் தொடர்ந்து பலக்கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரி அரசு இந்த தனியார் மய கொள்கையை எதிர்க்காமல், மின்துறையை தனியார் மையமாக்குவதற்கு அரசு டெண்டர் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதுச்சேரி அரசின் இந்த முடிவை கண்டித்து, காரைக்கால் மாவட்ட மின் துறை ஊழியர்கள், நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊழியர்களின் போராட்டத்தால் மின் பழுது பார்த்தல், மின் கட்டணம் கட்டுதல், மின் அளவீடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மின் துண்டிப்பு ஏற்படும் பல பகுதிகளில் பொதுமக்கள் 2 நாட்களாக பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தத் தொடர் மின்வெட்டை கண்டித்து அம்பகரத்தூர், திருநள்ளார், சேத்தூர், விழுதியூர், நல்லம்பல், திருப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பல மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரண்டாம் நாளாக மின் ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்ததால் பல்வேறு இடங்களில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் தோமாஸ் அருள் வீதி, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மின் தடை ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் காரைக்கால் ரயில் நிலையம் அருகே சாலை மறியல் ஈடுபட்டனர்.
- விரைவு ரெயிலை தனியாருக்கு விற்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
நெல்லை:
தெற்குரெயில்வே மஸ்தூர் யூனியன் மதுரை கோட்ட நெல்லை கிளை சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில்நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்தியசங்க துணைத்தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார். எஸ்.ஆர். எம். யூ. நெல்லை கிளை தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் அய்யப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அகில இந்திய அஞ்சல் ஓய்வூதியர் சங்க செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரராஜா சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் கோவை-சீரடி சுற்றுலா விரைவு ரெயிலை தனியாருக்கு விற்பனை செய்ததை திரும்பபெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்